"கட்டிட அனுமதி மீறி கட்டுமானத்தை அனுமதிக்க கூடாது" - நகராட்சி ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 6850

கட்டிட அனுமதியை மீறி கட்டுமானம் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவர் மணிகண்டன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  ஜெயங்கொண்டம் ஜோசப் ரெட்டியார் காலனியில், 15 அடி அகல பொதுப்பாதையில் ஜெரோம் ஸ்டான்லி மற்றும் ரீட்டா மேரி என்பவர்கள், 5 அடி வரை ஆக்கிரமித்து கட்டுமான பணி மேற்கொண்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்பை அகற்றும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், எனவும் கோரியிருந்தார்.

இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பாண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கட்டுமானப் பணிகள் மேற்கொண்டு நடைபெறாமல் நிறுத்தப்பட்டதாக, நகராட்சி ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், கட்டிட அனுமதியை மீறி கட்டுமானங்களை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்றும், பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும், நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments